இன்னும் ஞாபகம் இருக்கிறது அந்த ஆண்டு தீபாவளி....
அப்பா பட்டாசு கண்டிப்பாக வாங்கி தருவார் என தெரியும், ஆனால் அது சீக்கிரம் தீந்து விடும் என தெரியும்.... எனவே நானும் என தம்பியும் சேர்ந்து ஒரு மிக முக்கியமான முடிவு எடுத்தோம்.... அது என்ன தெரியுமா??? ரொம்ப நேரம் தீராம வெடிக்கற பட்டாசு என்ன என யோசித்து முடிவு செய்தோம் அது ஊசி பட்டாசு தான்... அப்போது அதன் விலை 5 ருபாய் ஒரு பாக்கெட் அதில் 100 வெடிகள் இருக்கும்(எப்படியும் அதில் 50 வெடிக்காம புஸ் ஆய்டும்).
இப்படி ஒரு மதத்திற்கு முன்பே முடிவு செய்து பணம் சேர்க்க ஆரம்பித்தோம் தினமும் அம்மா தரும் 50பைசா ஒரு ருபாய் என சேர்க்க
ஆரம்பித்து கடைசியில் 30 ருபாய் ஆய்டுச்சு... எதோ முதல் மாத சம்பளம் வாங்கியது போல் மனதில் ஒரு மகிழ்ச்சி... (இருக்காதா பின்ன அதுல பாதி பணம் அம்மா சில்லறை போடா வைத்திருக்கும் குங்கும சிமிழில் இருந்து திருடியது).
ஓகே பணம் சேர்த்தாச்சு இனி அடுத்தது என்ன பட்டாசு வாங்க வேண்டியது தான். பட்டாசு கடை விட்டிற்கு அருகில் இருந்தாலும் ஓடி சென்று பட்டாசு கடையை அடைந்தோம்... (இன்னும் 3 நாட்கள் இருக்கு தீபாவளிக்கு).கடை காரரிடம் அண்ணா ஒரு 6 பாக்கெட் ஊசி பட்டாசு பார்சல் என்ன ஒரு கெத் ஆனா தொனியில் பட்டாசு கேட்டோம்... கடைகாரர் சொன்ன பதில் இடியாய் எங்கள் மனதில் தம்பி ஊசி பட்டாசு திந்து போச்சு நாளைக்கு தான் வரும்... ஒரே குழப்பம் மனதில் வேற பட்டாசு வாங்கினால் திந்துவிடும் எனவே கடை அருகிலேயே நானும் தம்பியும் ஒரு மீட்டிங் போட்டு ஒரு முடிவு பண்ணினோம்... கடை காரரிடம் கேட்டோம் அண்ணா நாளைக்கு வருமா வேணும்னா இந்த 30ருபா நீங்க இப்பவே வங்கிகொங்க நாளைக்கு மறக்காம வாங்கிட்டு வாங்க என்ன சொல்ல கடை காரர் சிரித்து கொண்டே பணம் இப்ப வேண்டாம் நாளைக்கு கண்டிப்பா வாங்கி வரேன் என்ன உறுதி கொடுத்தார்...
அடுத்த நாள் கடைக்கு போனோம் இந்த தம்பி பட்டாசு என்ன கொடுத்தார், ஹா ஹா மனதில் எதோ ஒரு உலக கோப்பையை வாங்கியது போல் ஒரு உணர்வு.... பட்டாசு வாங்கி விட்டிற்கு வரும் வழியில் அடுத்த யோசனை விட்டிற்கோ அல்லது நண்பர்களுக்கோ தெரியாமல் வேண்டுமே??? ஒரு முடிவு பண்ணி விட்டிற்கு வெளியில் உள்ள அலமாரியில் வைத்தோம்... அதை நானும் என் தம்பியும் குறைந்தது ஒரு 30 முறை திறந்து பார்த்தோம்(பின்ன யாரது அதை எடுத்துட).
தீபாவளி வந்தது அப்பா பங்கிட்டு கொடுத்த பட்டாசு,மற்றும் நங்கள் வாங்கிய பட்டாசு எல்லா சேர்த்து எதோ ஒரு கடை பட்டாசை வைத்தது போல ஒரு எண்ணம் மனதில்... ஊசி பட்டாசை ஒவ்வொன்றாக வெடிக்க வேண்டும் என்று முன்னமே முடிவு செய்த படி வெடிக்க ஆரம்பித்தோம்.. இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருகிறது ஊசி பட்டாசுக்கு அப்பா வாங்கி தந்த பெரிய ஊதிபத்தி... ஒரு வழியாக தீபாவளி முடிந்தது...
ஆனால் நாங்க வாங்கி வைத்த ஊசி பட்டாசு தீரவே இல்லை...
அட அட அட....
அன்று மனதில் இருந்த சந்தோசம் இப்போது எல்லாம் எவ்வளவு பெரிய வெடிகள் எவ்வளவு வாங்கினாலும் வருவது இல்லை...
இருந்தும் எவ்வளவு பட்டாசு வாங்கினாலும் கூடவே வாங்கி வருவேன் ஒரு பாக்கெட் ஊசி பட்டாசும், பெரிய ஊதுபத்தியும்.....
ஆனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

No comments:
Post a Comment