Monday, October 21, 2013

என் தீபாவளி நினைவுகள்.....

இன்னும் ஞாபகம் இருக்கிறது அந்த ஆண்டு தீபாவளி....


அப்பா பட்டாசு கண்டிப்பாக வாங்கி தருவார் என தெரியும், ஆனால் அது சீக்கிரம் தீந்து விடும் என தெரியும்.... எனவே நானும் என தம்பியும் சேர்ந்து ஒரு மிக முக்கியமான முடிவு எடுத்தோம்.... அது என்ன தெரியுமா??? ரொம்ப நேரம் தீராம வெடிக்கற பட்டாசு என்ன என யோசித்து முடிவு செய்தோம் அது ஊசி பட்டாசு தான்... அப்போது அதன் விலை 5 ருபாய் ஒரு பாக்கெட் அதில் 100 வெடிகள் இருக்கும்(எப்படியும் அதில் 50 வெடிக்காம புஸ் ஆய்டும்).

இப்படி ஒரு மதத்திற்கு முன்பே முடிவு செய்து பணம் சேர்க்க ஆரம்பித்தோம் தினமும் அம்மா தரும் 50பைசா ஒரு ருபாய் என சேர்க்க
ஆரம்பித்து கடைசியில் 30 ருபாய் ஆய்டுச்சு... எதோ முதல் மாத சம்பளம் வாங்கியது போல் மனதில் ஒரு மகிழ்ச்சி... (இருக்காதா பின்ன அதுல பாதி பணம் அம்மா சில்லறை போடா வைத்திருக்கும் குங்கும சிமிழில் இருந்து திருடியது).

ஓகே பணம் சேர்த்தாச்சு இனி அடுத்தது என்ன பட்டாசு வாங்க வேண்டியது தான். பட்டாசு கடை விட்டிற்கு அருகில் இருந்தாலும் ஓடி சென்று பட்டாசு கடையை அடைந்தோம்... (இன்னும் 3 நாட்கள் இருக்கு தீபாவளிக்கு).கடை காரரிடம் அண்ணா ஒரு 6 பாக்கெட் ஊசி பட்டாசு பார்சல் என்ன ஒரு கெத் ஆனா தொனியில் பட்டாசு கேட்டோம்... கடைகாரர் சொன்ன பதில் இடியாய் எங்கள் மனதில் தம்பி ஊசி பட்டாசு திந்து போச்சு நாளைக்கு தான் வரும்... ஒரே குழப்பம் மனதில் வேற பட்டாசு வாங்கினால் திந்துவிடும் எனவே கடை அருகிலேயே நானும் தம்பியும் ஒரு மீட்டிங் போட்டு ஒரு முடிவு பண்ணினோம்... கடை காரரிடம் கேட்டோம் அண்ணா நாளைக்கு வருமா வேணும்னா இந்த 30ருபா நீங்க இப்பவே வங்கிகொங்க நாளைக்கு மறக்காம வாங்கிட்டு வாங்க என்ன சொல்ல கடை காரர் சிரித்து கொண்டே பணம் இப்ப வேண்டாம் நாளைக்கு கண்டிப்பா வாங்கி வரேன் என்ன உறுதி கொடுத்தார்...

அடுத்த நாள் கடைக்கு போனோம் இந்த தம்பி பட்டாசு என்ன கொடுத்தார், ஹா ஹா மனதில் எதோ ஒரு உலக கோப்பையை வாங்கியது போல் ஒரு உணர்வு.... பட்டாசு வாங்கி விட்டிற்கு வரும் வழியில் அடுத்த யோசனை விட்டிற்கோ அல்லது நண்பர்களுக்கோ தெரியாமல் வேண்டுமே??? ஒரு முடிவு பண்ணி விட்டிற்கு வெளியில் உள்ள அலமாரியில் வைத்தோம்... அதை நானும் என் தம்பியும் குறைந்தது ஒரு 30 முறை திறந்து பார்த்தோம்(பின்ன யாரது அதை எடுத்துட).

தீபாவளி வந்தது அப்பா பங்கிட்டு கொடுத்த பட்டாசு,மற்றும் நங்கள் வாங்கிய பட்டாசு எல்லா சேர்த்து எதோ ஒரு கடை பட்டாசை வைத்தது போல ஒரு எண்ணம் மனதில்... ஊசி பட்டாசை ஒவ்வொன்றாக வெடிக்க வேண்டும் என்று முன்னமே முடிவு செய்த படி வெடிக்க ஆரம்பித்தோம்.. இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருகிறது ஊசி பட்டாசுக்கு அப்பா வாங்கி தந்த பெரிய ஊதிபத்தி... ஒரு வழியாக தீபாவளி முடிந்தது...


ஆனால் நாங்க வாங்கி வைத்த ஊசி பட்டாசு தீரவே இல்லை...

அட அட அட....

அன்று மனதில் இருந்த சந்தோசம் இப்போது எல்லாம் எவ்வளவு பெரிய வெடிகள் எவ்வளவு வாங்கினாலும் வருவது இல்லை...

இருந்தும் எவ்வளவு பட்டாசு வாங்கினாலும் கூடவே வாங்கி வருவேன் ஒரு பாக்கெட் ஊசி பட்டாசும், பெரிய ஊதுபத்தியும்.....

ஆனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

Wednesday, January 2, 2013

அனைவர்க்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இன்று முதல் என் ப்ளாக் மிண்டும் தொடரலாம் என்று எண்ணி இருக்கிறேன்....

ஆனா என்ன எழுதறதுன்னு  தாங்க தெரில... சரி எதாவது எழுதுவோம்....

2013 நல்ல படியா அமையனும்.....

அதுக்கு முன்னாடி கொஞ்சம் போன வருடம் (2012) திரும்பி பாக்கலாம்....

போன வருடம் முக்கியமான நிகழ்வுனா எனக்கு ஒரு கல்லூரியில் வேலை கிடைச்சது (என்னையும் நம்பி வேல கொடுத்தாங்க ) ஒரு அளவுக்கு வேலை நல்ல செஞ்சேன்னு நனைகறேன்......

அங்க நிறைய நல்லவங்க எனக்கு நிறைய உதவி செஞ்சாங்க....

குறிப்பா ஆண்டனி அண்ணன், ராஜேஷ் சார் ,புகழ் என நிறைய பேர் எனக்கு நிறைய கற்றுகொடுதாங்க... அவங்க எல்லாத்துக்கும் நன்றி.....  அப்புறம்  கல்யாணசுந்தரம்  இவர  பாத்து  நான்  தமிழ் உணர்வும்   மற்றும்  தமிழ் ஈழம் மக்கள் மீது அன்பும் பெருகுச்சு....    இவர்கள் உதவியால் நான் அங்க புதுசா இருந்த மாறியே தெரில.... ரொம்ப நன்றி உங்களுக்கு மறுபடியும்......

அப்படியே ரொம்ப நாள் கழிஞ்சு பேருந்து பிரயாணம் தினமும் செய்கிற அனுபவம் கிடைச்சது கல்லூரி பேருந்தில்.....

நண்பர்களின் பிரிவு 
என்னுடைய  தவறுகளால் இந்த வருடம் நிறைய நண்பர்களை பிரிந்தேன் அது என்னுடைய முழு தவறுதான்.... எல்லாரும் மன்னிக்கவும்.... இந்த வருடம் கண்டிப்பாக என் நண்பர்களின் நட்பை மீண்டும் கட்டி எழுப்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு இந்த வருடம் தந்து இருக்கிறது.....

என் ட்விட்டர் நண்பர்கள் 
போன  வருடம் ட்விட்டர் நிறைய நேரம் இருந்தேன் (அப்ப வேற வேலை இல்லையான்னு நீங்க கேக்கறது எனக்கு தெரியும் ) நல்ல நண்பர்கள் நிறைய பேர் கிடைதங்க நிறைய பேர் இருக்கறதாள பெயர் சொல்லல யாரும் கோச்சுக்க மாடிங்கனு நினைக்கற....

என் தம்பியின் திருமணம் 
என் தம்பிக்கு இந்த வருடம் திருமணம் நடந்தது.... முன்னாடி நின்னு நிறைய விசியங்கள செஞ்ச சந்தோசம் கிடைச்சது.... சொந்தங்கள் எல்லாம் கூடி ஒரு திருவிழா மேரி இருந்துச்சு... அவனது மனைவியும் நல்ல படியாக எங்கள் குடும்பத்துடன் இணைந்து கொண்டால்.... ரொம்ப சந்தோசம்....

எனது மனைவி 
எல்லாத்தையும் பத்தி சொல்லிட்டு மனைவி பற்றி சொலலேன்னா எப்படி(விட்டுக்கு போய் யாரு அடி வாங்கறது ) இந்த வருடம் அவளுடன் நல்ல படிய போச்சு இடையில் கொஞ்சம் சண்டை (சண்டை இல்லாம எப்படி) ஆனா அவளை பற்றி இன்னும் அதிகமா தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பா அமைந்தது. இந்த வருடம் அவளுக்கு ஒரு MNC-ல   வேலை கிடைத்தது முக்கியமான விஷியம்.

இதுக்கு மேல உங்கள மொக்க போட விரும்புல எனவே நீங்க திட்டறத நிறுத்திக்கலாம்.....

அப்புறம் இது போன்ற பதிவு எழுத என் உடன்பிறவா தம்பி சரவணன் உடைய ப்ளாக் தான் காரணம்.... எனவே அவனுக்கும் ரொம்ப நன்றி (இல்லனா போன் பண்ணி திடுவான்).

கடைசியா நிறைய எழுத்துப்பிழை இருக்கும் யாரும் தப்பா நினைக்க வேண்டாம் உங்க கருத்துகள மறக்காம தெரிவிங்க. இவளோ நேரம் பொறுமையா படிச்சதுக்கு ரொம்ப நன்றி.....